Tuesday, 18 August 2009

8.காரணம் - காரியம்


ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (Karya)என்னும் வேற்றுமொழிச்சொல்லும் காரணம்,காரியம் என்று தமிழில் திரிந்தாகக் கூறுவார்கள்.காரண காரியம் என்பதை தூண்டுதலும் துலங்கலும் Cause and Effect எனக் கூறலாம். ஒரு செயலைச் செய்வதற்கான...

Monday, 3 August 2009

7.அகிலாண்டம்


சிவனின் மனைவியாகிய பார்வதிக்குள்ள பல பெயர்களில் அகிலாண்டேசுவரி என்பதும் ஒன்றாகும். அகிலம்+அண்டம்+ஈசுவரி என்ற முச்சொற்களின் கூட்டே அகிலாண்டேசுவரி என்பதாகும்.அகிலம் என்பது வேற்றுமொழிச்சொல் ,அதுவே அகில் ( Akil அல்லது Ahil ) என்று சொல்லப்படதாகவும் கூறப்படும். தமிழ்நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள், அகில பாரத என்றும்,...

Tuesday, 30 June 2009

6.இதர


(இதர என்பது தமிழ்ச்சொல்லே)----------------------ஆட்சிமொழி ஆணையத்தில், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது," இதர " என்னும் சொல்லைப் பயன்படுத்தலாமா என்னும் கேள்வி எழுந்தது.அந்தச் சொல் வடசொல்லாக இருப்பதால் , அதனை அறவே விலக்க வேண்டும் என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர். அப்போது, " இது தமிழ்ச்சொல்தான் , ' இதுதவிர ' என்னும் சொல்லே" இதர " என்று சுருங்கியுள்ளது " என்று சொன்னேன். இராமலிங்கனார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே...

5.திசை


( திசை என்பது தமிழ்ச்சொல் என்பதை விளக்கும் இடுகை )உணவு சமைப்பதற்கும் , இரவில் விலங்குகளை விரட்டுவதற்கும் தீ தேவைப்பட்டது. அந்தத் தீயைத் தான் அதாவது கதிரவனைக் கடவுளாக ஆதிமாந்தன் கண்டான் என்பதைப் பார்த்தோம்.ஒரு பொருளின் அழகையோ அல்லது பெருமையோ சொல்ல வேண்டுமெனில் இன்னொரு பொருள் இருக்க வேண்டும் என்பது அகிலத்தின் அழியா விதி.அப்படி தான் சிலரின்...

Sunday, 28 June 2009

4.அந்தி


( அந்தி என்பது அருமையான தமிழ்ச்சொல் தான் )காலையில் தோன்றும் கதிரவனைக் கண்ட மாந்தன் அதை ஆதி என்று அழைத்தான்.மாலையில் அந்தத் தீ (கதிரவன்) அணைவதை(மறைவதை)க் கண்டான்.இப்பொழுது அமைதி என்ற சொல்லைப் பார்ப்போம். எவ்வித சலனமின்றி, சத்தமின்றி இருக்கும் நிலையை அமைதிஎன்கின்றோம்.ஆனால் அதற்கு உண்மையான பொருள் அது அன்று.மகாத்மா காந்தி அவர்கள் " ஒடுக்கப்பட்ட...

3.ஆதி


(ஆதி என்பது தமிழ்ச்சொல் தான் என்பதற்கான இடுகை )ஆதிவாசியாக அலைந்த மாந்தனுக்கு இரவோ அச்சத்தைத் தந்தது, பகலோ பயத்தைப் போக்கியது. காலையில் எரிந்து மாலையில் அணையும் தீயாக தான்கதிரவன் அவன் கண்ணுக்குக் காட்சி அளித்தது. இப்படி இருட்டை விலக்கி ஒளியை அளித்த பகலவனை ஆதிமாந்தன் கடவுளாக காண ஆரம்பித்தான்.இப்படி தான் தீ என்பது அவனின் தெய்வம் ஆனது.தீ-தெய்-...

2.சோடி, சோடிப்பு, சோடனை


( சோடி, சோடிப்பு, சோடனை என்பது எல்லாம் தமிழ்ச்சொற்கள் என்பதை விளக்கும் இடுகை )(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )பெண், மாப்பிள்ளைகளைச் சோடிப்பது, " திருமணத்தன்று " நிகழ்வது. அழகுசெய்வது, புனைவது இவையே, " சோடித்தல் "சொல்லிற்குப் பொருளாக இருக்க முடியும்.நிலத்தில் நடக்கும்போது பாதம் பதிந்துவிடுகின்றது. இந்தப் பதிவு சுவடு...
 

இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே Copyright © 2009 Flower Garden is Designed by Ipietoon for Tadpole's Notez Flower Image by Dapino