Tuesday 30 June 2009

5.திசை


( திசை என்பது தமிழ்ச்சொல் என்பதை விளக்கும் இடுகை )



உணவு சமைப்பதற்கும் , இரவில் விலங்குகளை விரட்டுவதற்கும் தீ தேவைப்பட்டது. அந்தத் தீயைத் தான் அதாவது கதிரவனைக் கடவுளாக ஆதிமாந்தன் கண்டான் என்பதைப் பார்த்தோம்.

ஒரு பொருளின் அழகையோ அல்லது பெருமையோ சொல்ல வேண்டுமெனில் இன்னொரு பொருள் இருக்க வேண்டும் என்பது அகிலத்தின் அழியா விதி.

அப்படி தான் சிலரின் அருமையும் ,பெருமையும் இருக்கும்போது தெரிவதில்லை.இறப்பிற்குப் பின் தான் உணர்கின்றோம்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதைத் தலை சாய்ந்துவிட்டது என்றும், மரம் விழந்துவிட்டதை மரம் சாய்ந்துவிட்டது என்றும், நேராக உட்காராமல் இருப்பவரைச் சாய்யாமல் நேராக உட்காரு என்றும் கூறுகின்றோம்.

தீயின் ( கதிரவன்) பெருமையை அதாவது காலையில் தோன்றுவதை, மாலையில் சாயும் போது தான் அதாவது மறையும் போது தான் ஆதிமாந்தன் உணர்ந்தான்.

தீ சாய்வதை அதாவது கதிரவன் மறைவதைத் தீச்சாய் என்றான்.

அதுவே நாளடைவில்

தீச்சாய் - தீச்சாய் - தீசாய் - தீசய் - திசய் - திசை என்றும்,

தீச்சாய் - தீச்சாய் - தீசாய் - தீசா - திசா என்றும் ஆனது.


கதிரவன் ( தீ ) மறைவதை அடிப்படையாக சொல்லப் பட்டதே திசை அல்லது திசா என்பதாகும்.அது பின் கதிரவன் உதிக்கும் மறைக்கும் பக்கத்தைக் குறிக்கும் சொல்லானது.

இன்றும் பள்ளிகளில்,

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றும்

சூரியன் மறையும் திசை மேற்கு என்றும்

படிக்க காண்கின்றோம்.

கதிரவன் மாலைப் பொழுது சாயங்காலம், சாய்ந்திரம் என்றும் அழைக்கப்பட்டது, சாய்வு என்னும் சொல்லின் அடிப்படையில் தான்.

திசை என்பதற்கு ஆங்கிலத்தில் " direction " என்று சொல்கின்றோம். அந்தச் சொல்லும் தீ ( de ) என்னும் சொல்லின் வழியில் வந்த சொல் தான்.


( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப் பட்டது )
 

இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே Copyright © 2009 Flower Garden is Designed by Ipietoon for Tadpole's Notez Flower Image by Dapino